15 வயது சிறுமிக்கு திருமணம்
கேரளாவின் பாலக்காடு அருகே 15 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. கடந்த மாதம் 28ஆம் தேதி சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலில் திருமணம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நலக் குழு காவல்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளது. 32 வயதுடைய இளைஞர் 15 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுமியின் வீடு மன்னார்க்காடு என்பதால், குழந்தைகள் நலக் குழு மன்னார்க்காடு போலீசாரிடம் அறிக்கை கேட்டுள்ளது. இரு குடும்பத்தினரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags :