அடுத்த அதிர்ச்சி.. அரிசி விலையும் உயர்கிறது
இந்தியா முழுவதும் பருப்பு விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில், தற்போதைய பருவநிலை காரணமாக அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த மாதம் அரிசியின் விலையை 7 % மத்திய அரசு உயர்த்தியது. இதனையடுத்து, இந்திய அரிசி ஏற்றுமதிக்கான ஆதரவு விலை 9 % உயர்த்தியுள்ளது. இது ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் சராசரி வெப்பநிலையைவிட அதிகரித்ததால் அரிசி உற்பத்தி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Tags :