அமர்நாத் யாத்திரைக்கு இடைவேளை
மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரையை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை மழை பெய்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை முதல் அமரலிங்கேஸ்வரரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வானிலை சீரடைந்தவுடன் புனித பயணம் மீண்டும் தொடங்கப்படும். வியாழக்கிழமை அமரலிங்கேஸ்வரரை 17,202 பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த 1ஆம் தேதி முதல் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். Tags :