உத்தரவை பின்பற்றாத அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யவும்

by Admin / 01-04-2022 10:58:21pm
உத்தரவை பின்பற்றாத அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யவும்

 தெய்வசிகாமணி என்ற மாநகராட்சி அதிகாரிக்குவிதிமீறல் கட்டடங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக் க தவறியதாக மூன்று ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தெய்வசிகாமணி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்து, பணிப்பயன் மற்றும் பணப்பலன்களை வழங்க  2013ம் ஆண்டு உத்தரவிட்டது. சென்னை மாநகராட்சி தரப்பில்இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த  நீதிபதிகள் அமர்வு, பதவி உயர்வுக்கான பட்டியலில் தெய்வசிகாமணி பெயரைப் பரிசீலிக்க  கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. வழக்கு எஸ். வைத்தியநாதன் மற்றும் முகமது சபிக்  அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பதவி உயர்வுக்குத் தனது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்று தெய்வசிகாமணிதரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளைச் அதிகாரிகள் கருத்தில் கொள்வதில்லை என்றும்  .நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளின் செயலுக்கு , சிறைத் தண்டனை விதிப்பதுதான்சாியாகஇருக்குமென்றும் உத்தரவை பின்பற்றாத அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யவும் இதுவரை நீதிமன்ற உத்தரவுகள் மூலம் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறைஆகியவற்றுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் இருந்து நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்றும் அரசிடம் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடு விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பதவியில் நியமிக்கப்படும் அதிகாரிகள், லஞ்சப் பணம் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய பதவியாஎன நினைப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்என்று  குறிப்பிட்டுள்ளனர்

 

Tags :

Share via