குடிபோதையில் குழந்தையை தூக்கி வீசிய கணவர்
கேரளாவின் கொல்லம் குறவன்பாலத்தில் குடிபோதையில் தந்தை தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து, குழந்தையை தூக்கி வீசியெறிந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் தமிழகத்தை சேர்ந்த முருகன் (35), மாரியம்மா (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின் போது அருகில் அக்கம்பக்கத்தினர் குழந்தையை மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து, குழந்தை திருவனந்தபுரம் எஸ்ஏடி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.<br /> Tags :