இமாச்சல் பிரதேஷ் ஆற்றில் மூழ்கிய கிராமம்

by Staff / 10-07-2023 03:02:57pm
இமாச்சல் பிரதேஷ் ஆற்றில் மூழ்கிய கிராமம் இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. மாநிலத்தில் உள்ள ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பல பாலங்கள் ஏற்கனவே இடிந்து விழுந்துள்ளன. இதனை தொடர்ந்து சாலைகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மண்டி மாவட்டத்தில் உள்ள கரான் கிராமம் சமீபத்தில் பியாஸ் நதியில் மூழ்கியது. இதனை தொடர்ந்து பேரிடர் மேலாண்மை அமைப்பு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

Tags :

Share via