கறிக்குழம்பு வைக்காத மனைவியை கொன்ற கணவன்

by Staff / 15-07-2023 03:14:52pm
கறிக்குழம்பு வைக்காத மனைவியை கொன்ற கணவன்

 தெலுங்கானா மாநிலம் கிஷ்தம்பேட் கிராமத்தை சேர்ந்தவர் போஷம் என்பவர் அவரது மனைவி சங்கரம்மாவிடம் கடந்த புதன்கிழமை வீட்டில் கோழிக்குழம்பு செய்யும்படி கூறியுள்ளார். ஆனால், சங்கரம்மா கோழிக்குழம்பு வைக்காமல் கத்தரிக்காய் குழம்பு வைத்துள்ளார். இதனால், மதுபோதையில் கணவன் மனைவி இடையே இரவு வாக்குவாதம் ஏற்பட்டு கணவன் மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via