15 ஆண்டுகாலமாக செங்கோட்டையிலிருந்து டீசல் எஞ்சினில் இயங்கிவந்த பொதிகை எக்ஸ்பிரஸ் எஞ்சினுக்கு பிரியா விடை கொடுக்கப்பட்டது.
செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு 2008 ஆம் ஆண்டு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் தொடங்கியது.கடந்த 15 ஆண்டுகாலமாக இந்தத்தடத்தில் டீசல் என்ஜினில் இயங்கிவந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இன்று செங்கோட்டை ரயில்நிலையத்தில் ரயில்பயணிகள் நலச்சங்கம் சார்பில் பிரியாவிடைக்கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.பொறியாளர் கிருஷ்ணன்,சுந்தரம் ஆகியோர் ஏற்பாட்டில் ரயில் ஓட்டுனர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புக்கள் வழங்கப்பட்டன.
நாளை நவம்பர் 1 ஆம் தேதி முதல் ரயில் எண்.12662 செங்கோட்டை -சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கத்தை தொடங்குகிறது.
நவம்பர்-2 ஆம் தேதி முதல் ரயில் எண் 16848 செங்கோட்டை -சென்னை எழும்பூர் சிலம்பு எக்ஸ் பிரஸ் செங்கோட்டையில் இருந்து மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கத்தை தொடங்குகிறது.
நவம்பர்-2 ஆம் தேதி முதல் ரயில் எண் 16848 செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டையில் இருந்து மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கத்தை தொடங்குகிறது.
ரயில் எண்.06504 மதுரை-செங்கோட்டை, ரயில் எண்.06664, செங்கோட்டை - மதுரை விரைவுரயில் 08.11.2023 (புதன்கிழமை) மின்சார எஞ்சினில் இயக்கத்தை தொடங்குகிறது.
ரயில் எண்.06030 திருநெல்வேலி - தென்காசி-மேட்டுப்பாளையம் (வாராந்திர) எக்ஸ்பிரஸ் பயணம் 12.11.2023 அன்று தொடங்குகிறது.
முறுமுனையில் ரயில் எண்.06029 மேட்டுப்பாளையம் - தென்காசி-திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் பயணம் 13.11.2023 (திங்கட்கிழமை) இயக்கப்படுகிறது.
பகவதிபுரம் முதல் புனலூர் வரை உள்ள கேரளப் பகுதிகளில் மின்சார இணைப்பு பணிகள் இன்னும் முடிவடையாததால், கொல்லம்-சென்னை-கொல்லம்-மதுரை-குருவாயூர்-மதுரை ரயில்கள்,வழக்கம் போல மதுரை வரை டீசல் என்ஜின் மூலமாக இயக்கப்படும். எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் வழக்கம் போல் டீசல் என்ஜின் மூலமாக இயங்கும்.பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும் வழக்கம் டீசல் என்ஜின் மூலமாக போல இயங்குமெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : பொதிகை எக்ஸ்பிரஸ் எஞ்சினுக்கு பிரியா விடை