பெரும் ஆபத்தில் இருந்து தப்பிய சந்திரயான் 3

by Staff / 28-08-2023 05:21:51pm
பெரும் ஆபத்தில் இருந்து தப்பிய சந்திரயான் 3

சந்திரயான் 3 பெரும் அசம்பாவிதத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது. சந்திரயான் 3 லேண்டரில் இருந்து நிலவில் தரையிறங்கியுள்ள பிரக்யான் ரோவர், ஆய்வில் ஈடுபட்டிருந் போது பரந்த பள்ளத்தை கண்டறிந்துள்ளது. ரோவர் அதனுள் விழுந்தால் வேலை செய்யாது என்பதை உணர்ந்த இஸ்ரோ, ரோவரை உடனடியாக திருப்பி வேறு பாதையில் பயணிப்பதற்கான சமிக்ஞைகளை வழங்கியது. ரோவர் வேறு பாதையில் பாதுகாப்பாக பயணித்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரோ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via