வெடிகுண்டு மிரட்டல்; அவசரமாக நிறுத்தப்பட்ட விமானம்

by Staff / 28-08-2023 05:18:39pm
வெடிகுண்டு மிரட்டல்; அவசரமாக நிறுத்தப்பட்ட விமானம்

கொச்சி அருகே நெடும்பசேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட இன்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஓடுதளத்தில் பறக்கத் தொடங்கிய போது திடீரென நிறுத்தப்பட்டது. விமானத்திற்கு மர்ம நபரிடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு விரைந்த வெடிகுண்டு சோதனை குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில், ஏதும் கண்டுபிடிக்கப் படவில்லை. கடந்த மாதம் இரண்டு முறை இதே போல் அழைப்பு வந்திருந்தது. இதனிடையே விமானத்தில் பயணிகளின் உடைமைகள் உள்ளிட்டவற்றில் தீவிர சோதனை நடத்தினர். சில மணி நேர தாமதத்திற்கு பிறகு மீண்டும் விமானம் புறப்பட்டுச் சென்றது.

 

Tags :

Share via