சிறையில் காதலித்து திருமணம் செய்த கைதிகள்

by Staff / 15-07-2023 04:38:33pm
சிறையில் காதலித்து திருமணம் செய்த கைதிகள்

மேற்கு வங்காளத்தில் உள்ள பர்தமான் மத்திய சீர்திருத்த இல்லத்தில் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் சிறையில் காதலித்து வந்தனர். அப்துல் ஹாசிம் மற்றும் சஹானாரா காதுன் இடையே மேற்கு வங்க சீர்திருத்த இல்லத்தில் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள நினைத்ததையடுத்து அவர்களுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் கிழக்கு பர்தமானின் மொண்டேஷ்வர் பிளாக்கில் உள்ள குசும்கிராமில் முஸ்லிம் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர்.

 

Tags :

Share via