மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழப்பு

by Staff / 15-07-2023 04:29:13pm
மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 18க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் 5 பேரும், அர்வாலில் 4 பேரும், சரனில் 3 பேரும், அவுரங்காபாத் மற்றும் கிழக்கு சம்பாரண் மாவட்டங்களில் தலா இரண்டு பேரும், பங்கா மற்றும் வைஷாலி மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via