கணவனின் பிறப்புறுப்பை அறுத்த மனைவி-காவல்துறையில் கதறிய கணவன்

by Editor / 15-12-2021 09:28:09am
கணவனின் பிறப்புறுப்பை அறுத்த மனைவி-காவல்துறையில் கதறிய கணவன்

மத்திய பிரதேச மாநிலம் திகம்நகர் மாவட்டம் ராம்நகர் பகுதியில் வசித்து வரும் இளம் தம்பதிகளுக்கு 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் சில காலம் தனித்தனியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். பின்னர் பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்த நிலையில் இருவரும் ஒன்றாக வசித்து வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதியன்று மனைவியை கணவர் சல்லாபத்திற்கு கணவர் முயன்ற நிலையில் இதில் மனைவிக்கு விருப்பம் இல்லாமல் இருந்தநிலையில் கணவர் கட்டாயப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த அவருடைய மனைவி, கணவரின் பிறப்பு உறுப்பை தனியாக துண்டித்துள்ளார்.

மனைவி தனது பிறப்புறுப்பை துண்டித்து விட்டதாக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்த கணவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் தான் இந்த கொடூரச் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டிசம்பர் 7ம் தேதியன்று நடைபெற்ற இச்சம்பவம் குறித்து மிகவும் தாமதமாகவே கணவர் புகார் அளித்திருக்கிறார். தற்போது இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

Tags :

Share via