சிறுமி கூட்டு பலாத்காரம்: காதலன் உட்பட 6 பேர் கைது

by Staff / 16-07-2023 01:28:27pm
சிறுமி கூட்டு பலாத்காரம்: காதலன் உட்பட 6 பேர் கைது

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம் அடூரில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரது காதலன், நண்பர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் பல நாட்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. குழந்தைகள் நலக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் போலீசார் ஜூலை முதல் வாரத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு விரிவான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. சிறுமியின் காதலன் உள்ளிட்ட குற்றவாளிகள் தலைமறைவாகி இருந்த நிலையில், நேற்று கைதாகினர்.

 

Tags :

Share via