ரயிலில் இருந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு

by Staff / 16-07-2023 02:22:56pm
ரயிலில் இருந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு

நாகர்கோவில் – கோவை இடையே சாத்தூர் அருகே ஆர்.ஆர்.நகர் பகுதியில் ரயிலில் இருந்து விழுந்த இருவர் உயிரிழந்தனர். படிக்கட்டில் பயணம் செய்வதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், இந்த மோதலில் இருவரும் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர். ரயிலின் படியில் இருந்து ஒருவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மற்றோருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

 

Tags :

Share via