7 மாநிலங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

by Staff / 16-07-2023 03:40:17pm
7 மாநிலங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம், நாட்டில் உள்ள ஏழு மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தராகண்ட், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மறுபுறம், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பஞ்சாப், ஜார்கண்ட் ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் 19ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via