கோவை டிஐஜி தற்கொலை - 8 பேருக்கு சம்மன்

by Staff / 16-07-2023 04:26:18pm
கோவை டிஐஜி தற்கொலை - 8 பேருக்கு சம்மன்

கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரத்தில் விசாரணைக்காக இன்று எட்டு பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கோவை டிஐஜி தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்தவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கோவை சரக டி.ஐ.ஜி ஆக இருந்தவர் விஜயகுமார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் காவல் துறையில் உள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via