இந்திய நிதித்துறை அதிக சுமை கொண்டதாக இருக்கிறது

by Staff / 15-04-2022 02:57:02pm
இந்திய நிதித்துறை அதிக சுமை  கொண்டதாக இருக்கிறது

இந்திய நிதித்துறை அதிகசுமை  கொண்டதாக இருக்கிறது என கருத்து கூறியுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் என் .வி . ரமணா நீதித்துறையின் உட்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் நிதித் துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார். உட்கட்டமைப்பு மேம்படுத்தினால் தான் அனைத்து குடிமகனுக்கும் நீதி கிடைப்பது சாத்தியமாகும் என கூறினார்  மேலும் நீதிமன்றங்களில் நாளுக்கு நாள் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் ஒரு வழக்கிற்கு தீர்ப்பு கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகிறது எனவும் அவர் தனக்குத்தானே கேள்வி எழுப்பிக் கொண்டார் . மேலும் சிபிஐ அமலாக்கத் துறை போன்ற புலனாய்வு அமைப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் எந்தவித அழுத்தத்திற்கும் உட்படாமல் சுதந்திரமாக வேலை செய்வதை உறுதி செய்யவே வேண்டுமெனவும் தலைமை நீதிபதி கூறினார்

 

Tags :

Share via