நெல்லையில்வாலிபர் வெட்டிகொலை

by Editor / 31-08-2021 09:21:36am
நெல்லையில்வாலிபர் வெட்டிகொலை

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூத்தன்குளி பகுதியில் கித்தேறியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபினேஷ் என்ற மகன் உள்ளார். இவர் பி.எஸ்.சி. நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில் கூத்தங்குளியில் இருந்து அபினேஷ் சுனாமி காலனிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென அபினேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அபினேஷ் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கூடங்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ், வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா மற்றும் காவல்துறையினர் அபினேஷின் உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன் முதற்கட்ட விசாரணையில் அபினேஷின் குடும்பத்தினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கூத்தங்குளி பகுதியில் உள்ள கீழூரில் வசித்து வந்துள்ளனர்.

அப்போது கீழூர் மற்றும் மேலூரில் வசிப்பவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அபினேஷின் குடும்பத்தினர் வீட்டை காலி செய்துவிட்டு சுனாமி காலனியில் வசித்து வந்துள்ளனர். எனவே அபினேஷ் பழைய முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Tags :

Share via