திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு

by Editor / 10-10-2021 04:47:20pm
திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்காக விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார் தலைமையில் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் இருப்பிட ஆதாரம், வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பித்துக் பதிவு செய்தனர். பின்னர் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை பெறுவதற்கு உண்டான சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர். இந்த முகாமில் கீழக்கரை தாசில்தார் முருகேசன், வட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் காசி விசுவநாதர் துரை ஆகியோர் பங்கேற்றனர்.

 

Tags :

Share via