கேள்வி கேட்ட மொத்த குடும்பத்தையும் சரமாரியாக கத்தியால் குத்திய சாமியார்

by Admin / 28-01-2022 10:44:18am
கேள்வி கேட்ட மொத்த குடும்பத்தையும் சரமாரியாக கத்தியால் குத்திய சாமியார்

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் வசித்து வருபவர் விஷ்ணு சாஹூ. இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகளும், 18 வயதில் ஜித்திஷ் என்ற மகனுக்கு மனநல பிரச்சனை இருந்துள்ளது.

இதனால் மகன் நலப்பெற வேண்டி தினுஷர்மா என்ற சாமியரை வீட்டிற்கு வரவழைத்து பூஜைகள் செய்துள்ளார். பூஜைகள் முடிந்த உடன் விஷ்ணு அது குறித்தான தனது விமர்சனங்களை சாமியாரிடம் கூறியுள்ளார்.
 
இதனால் கோபமடைந்த சாமியர் தினுஷர்மா அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து மாலை 4 மணிக்கு பிரசாதம் கொடுப்பதாக கூறி விஷ்ணுவின் வீட்டிற்கு வந்த சாமியார் தினுஷர்மா, விஷ்ணு அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். 

அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். சம்பவத்தில் ஈடுபட்ட சாமியாரை பிடித்து, காவலர்களிடம் ஒப்படைத்தனர். 


 
 

 

Tags :

Share via