எதிர்க்கட்சி கூட்டத்தை திசைதிருப்பவே சோதனை - ஆர்.எஸ்.பாரதி

by Staff / 17-07-2023 01:27:09pm
எதிர்க்கட்சி கூட்டத்தை திசைதிருப்பவே சோதனை - ஆர்.எஸ்.பாரதி

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசைதிருப்பவே அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'யார் பிரதமராக வரக்கூடாது என்பதே முக்கியம் என்ற முழக்கத்தை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்ததில் இருந்தே நெருக்கடி கொடுக்கப்படுகிறது. எதற்காக இந்த சோதனை என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது' என்றார். உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல் இன்று பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் முக்கிய கூட்டம் நடக்கிறது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பெங்களூரு செல்கிறார்.

 

Tags :

Share via