கார் மோதி பலியான 9 மாத குழந்தை

by Staff / 26-03-2024 03:15:57pm
கார் மோதி பலியான 9 மாத குழந்தை

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி பகுதியில் நடந்த கோர விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(மார்க் 25) கணவன் மனைவி இருவரும் குழந்தையுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, ​​வேகமாக வந்த கார் மற்றோரு வாகனத்தை முந்த முயற்சிக்கும்போது தம்பதிகள் சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் தம்பதிகளின் 9 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தம்பதிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தம்பதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via