டாஸ்மாக் கடைகளில்டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையின் போது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நேற்று கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் தொழிலாளர்களின் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு மது விலை உயர்வு குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது. டாஸ்மாக்கில் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags :