அண்ணாமலை ஊர்வலத்தில் விஜய் தொண்டர்களை கலந்துகொள்ளவில்லை.
மதுரையில் நேற்று நடைபெற்ற அண்ணாமலை பாதயாத்திரையில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் சிலர் சென்று பாதயாத்திரையில் பங்கேற்றது சலசலப்பை ஏற்படுத்தியுது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இதனை மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை'' என பதிவிட்டுள்ளார்.
Tags :