1 வதுஅணு உலையில் 64 நாட்களுக்குப்பிறகு மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.
நெல்லைமாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா-ரஷ்யா நாடுகளின் கூட்டு முயற்சியில் இரு அணு உலைகள் இயக்கப்பட்டு அவற்றின் மூலம் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக. கடந்த ஜூலை 24 நள்ளிரவில் 1 வது அணு உலை நிறுத்தப்பட்டது. இதனால் 2 வது அணு உலை மூலம் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகளில் ஈடுப்பட்ட இரு நாட்டு விஞ்ஞானிகளின் விரைவான முயற்சியால் 64 நாட்களுக்கு பின்னர் இன்று பகல் 12.06 மணி அளவில் 1 வது அணு உலை யில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.
துவக்க நிலையில் 100 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில்படிப்படியாக மின் உற்பத்தி 1000 மெகாவாட்டாக. உயர்த்தப் படுமென கூடன் குளம் அணு உலை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே 3 மற்றும் 4 வது அணு உலைகளின் கான்கீரீட் பணிகள் சுமார் 80 சதவீதம் முடி வடைந்து தற்போது 5 மற்றும் 6 வது அணு உலைகளின் பணிகளும் வேகமாக நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Tags : 5 மற்றும் 6 வது அணு உலைகளின் பணி