தேர்வாணையம் மூலம் பணி நியமனம் செய்க வேண்டும் ஓபிஎஸ்

by Staff / 07-08-2023 04:57:12pm
தேர்வாணையம் மூலம் பணி நியமனம் செய்க வேண்டும்  ஓபிஎஸ்

அரசுப் பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு தி.மு.க.வினரால் 10 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தேர்வாணையத்தின் மூலம் மட்டுமே நியமித்திட வேண்டும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via