பீடிக்காக தகராறு செய்த வாலிபர் படுகொலை

by Staff / 08-08-2023 12:44:11pm
பீடிக்காக தகராறு செய்த வாலிபர் படுகொலை


புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர், 60. இவரது இளைய மகன் கோபி, 27; சென்ட்ரிங் தொழிலாளி.
இவர், மது போதையில் கொடுங்கையூர், ஆர். ஆர். நகர் பிரதான தெரு வழியாக நேற்று அதிகாலை சென்றுள்ளார். அங்கு, மது போதையில் அமர்ந்திருந்த, அப்பகுதியைச் சேர்ந்த சிவா, 55, எழில் நகரைச் சேர்ந்த ஜான்சன், 24, ஆகியோரிடம் பீடி கேட்டு வீண் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், சிவாவை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினார். ஆத்திரமடைந்த இருவரும், கோபியை துரத்தி பிடித்து, சரமாரியாக தாக்கி, அம்மிக் கல்லை தலையில் போட்டு கொலை செய்தனர். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே, கோபி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரித்த கொடுங்கையூர் போலீசார், ஜான்சன், சிவா ஆகியோரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜான்சன் மற்றும் சிவா மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

 

Tags :

Share via