இறந்த தொழிலாளர் உடலை எடுத்துச் செல்ல அரசு நிதி

by Staff / 08-08-2023 02:57:58pm
இறந்த தொழிலாளர் உடலை எடுத்துச் செல்ல அரசு நிதி

கட்டுமான தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அரசு அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடும், செலவீனமும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தால், சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான ரயில் செலவு அல்லது விமானம் மூலம் எடுத்துச் சென்றால் அதிகபட்சமாக ஒரு லட்சம் வழங்கப்படும் எனவும் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தால் வழங்கப்படும்.

 

Tags :

Share via