இளம்பெண்ணை கடத்திய ஆன்லைன் காதலன்
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இன்ஸ்டாகிராமில் காதலித்த ஒரு ஜோடி, தங்கள் திருமணத்திற்காக கடத்தல் நாடகம் ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இன்ஸ்டாகிராமில் ஹன்சிகா வர்மா என்ற பெண்ணை ராஜ் சிங் என்ற இளைஞர் சந்தித்து காதலித்து வந்தார். அவர்கள் திருமணம் செய்து கொள்ள பணம் தேவைப்பட்டது. இதனை அடுத்து பணத்துக்காக இருவரும் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடினார்கள். ஹன்சிகாவை கடத்திய வீடியோவை அவரது தந்தைக்கு அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டுள்ளார் ராஜ் சிங். இது குறித்து ஹன்சிகாவின் தந்தை போலீசில் புகார் அளித்ததையடுத்து, ராஜ் சிங்கை போலீசார் கைது செய்தனர்.
Tags :