திருநெல்வேலியில் ரயில்வே பாலம் பராமரிப்பு பணி - ரயில் சேவைகளில் மாற்றம்
திருநெல்வேலி ரயில்வே யார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரயில் பாலம் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
*முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் ரத்து*
1. திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லக்கூடிய முன்பதிவில்லா சிறப்பு ரயிலானது (வ.எண்.06675) நாளை (09.08.2023) முழுமையாக ரத்து.
2. திருச்செந்தூர் - வாஞ்சிமணியாச்சி செல்லக்கூடிய முன்பதிவில்லா சிறப்பு ரயிலானது (வ.எண்.06680) நாளை (09.08.2023) முழுமையாக ரத்து.
*பகுதியாக ரயில்கள் ரத்து*
1. தாம்பரம் - நாகர்கோவில் செல்லக்கூடிய *அந்தோத்யா சிறப்பு விரைவு ரயில்* (வ.எண்.20691) இன்று (08.08.2023) தாம்பத்தில் இருந்து விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும்.
2. நாகர்கோவில் - தாம்பரம் செல்லக்கூடிய *அந்தோத்யா சிறப்பு விரைவு ரயில்* (வ.எண்.20692) நாளை (09.08.2023) நாகர்கோவிலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக விருதுநகரில் இருந்து புறப்படும்.
3. பாலக்காடு சந்திப்பு - திருச்செந்தூர் செல்லக்கூடிய விரைவு ரயிலானது (வ.எண்.16731) நாளை (09.08.2023) பாலக்காட்டில் இருந்து கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
4.திருச்செந்தூர் - பாலக்காடு சந்திப்பு செல்லக்கூடிய விரைவு ரயிலானது (வ.எண்.16732) நாளை (09.08.2023) திருச்செந்தூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கோவில்பட்டியில் இருந்து புறப்பட்டும்.
*ரயில் நேரம் மாற்றம்*
1. திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லக்கூடிய முன்பதிவில்லா சிறப்பு ரயிலானது (வ.எண்.06409) நாளை (09.08.2023) மாலை 4.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 6.00 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :