நாளைமுதல் 15 ஆம் தேதிவரை தாம்பரம்- நெல்லை  சிறப்பு ரயில்கள் இயக்கம்:  தெற்கு ரயில்வே அறிவிப்பு   

by Editor / 10-08-2023 08:56:24pm
நாளைமுதல் 15 ஆம் தேதிவரை தாம்பரம்- நெல்லை  சிறப்பு ரயில்கள் இயக்கம்:  தெற்கு ரயில்வே அறிவிப்பு   

நாளை ஆக.11  துவங்கி 15 தேதி வரை தொடர் விடுமுறை இருப்பதால் சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படும். 

இதனை தவிர்க்கும் விதமாக தெற்கு ரயில்வேயின் சார்பில் தாம்பரம் - திருநெல்வேலி தாம்பரம்  சிறப்பு விரைவு ரயில் இயக்க இருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.   அதன்படி வருகின்ற 11ஆம் தேதி (06051) தாம்பரத்திலிருந்து சிறப்பு விரைவு ரயில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4: 15 மணியளவில் திருநெல்வேலியை சென்றடையும்.  அதேபோல (06052) திருநெல்வேலியில் இருந்து 12ஆம் தேதி மாலை 5:50 மணி அளவில் புறப்படும் ரயில் மறுநாள் காலை  4:10 மணியளவில் தாம்பரம் சென்றடையும்.

 இதில்  இரண்டு முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், 9 படுக்கை வசதி உடைய பெட்டி, 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள்,  இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சிறப்பு ரயில். தாம்பரம், செங்கல்ப்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை விருதுநகர் கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைமுதல் 15 ஆம் தேதிவரை தாம்பரம்- நெல்லை  சிறப்பு ரயில்கள் இயக்கம்:  தெற்கு ரயில்வே அறிவிப்பு   
 

Tags : நாளைமுதல் 15 ஆம் தேதிவரை தாம்பரம்- நெல்லை  சிறப்பு ரயில்

Share via