அழுகியநிலையில் சாக்குமூட்டையில் பெண்ணின் உடல் கொலைசெய்து வீசிச்சென்றவர்கள் யார்..? 

by Editor / 10-08-2023 10:32:15pm
அழுகியநிலையில் சாக்குமூட்டையில் பெண்ணின் உடல் கொலைசெய்து வீசிச்சென்றவர்கள் யார்..? 

 தென்காசி மாவட்டம்  சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வலசை  காட்டு பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சடலம் ஒன்று மிதந்து  கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

 தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்..சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த  அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டனர். .இதனை தொடர்ந்து  புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

 மேலும் அடையாளம் தெரியாத சடலம்  பெண் சடலம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். மேலும் சாக்கில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் சடலம் இருந்ததால் யார் என்ற விவரம் தெரியவில்லை. மேலும் இந்த கிணற்றில் இவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா?  இல்லை வேறு ஏதும் காரணமா என்ற பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உடற்கூறு ஆய்வுக்காக சடலத்தை  தென்காசி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிணற்றில் மீட்கப்பட்டதை தொடர்ந்து  வலசை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : அழுகியநிலையில் சாக்குமூட்டையில் பெண்ணின் உடல்

Share via