உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கானஇலச்சினையினை மின்னணு திரை வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர்  மொ. நா.பூங்கொடி

by Admin / 11-08-2023 01:16:06am
 உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கானஇலச்சினையினை மின்னணு திரை வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர்  மொ. நா.பூங்கொடி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கானஇலச்சினையினை சென்னையில் வெளியிட்டார். இந்நிகழ்வினை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்னணு திரை வாயிலாக நேரலையாக மாவட்ட ஆட்சித்தலைவர்  மொ. நா.பூங்கொடி , அவர்கள் தலைமையில் தொழில்அதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பார்வையிட்டனர்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடைக்கோடித் தமிழரின் கனவுகளை தாங்கி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற இலட்சியத்திற்கிணங்க படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் தொடங்கிட வைத்து, தொழில் முனைவோர்களாக உருவாக்கி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில்தான் படித்த இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் வகையிலும், படித்த இளைஞர்களின் மனிதவளத்தை பயன்படுத்திடும் வகையிலும், தமிழகத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களை உருவாக்கிடவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய வரவழைத்து புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வில் வளம்பெறச் செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். தெற்காசியாவிலேயே முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயலாற்றி வருகிறார்.அந்தவகையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்             .மு.க.ஸ்டாலின் தலைமையில் "உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024" (Global Investors Meet 2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சென்னையில் 07.01.2024 மற்றும் 08.01.2024 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது அந்நிகழ்வின் முன்னேற் பாடாக முதலமைச்சர்         .மு.க.ஸ்டாலின் , உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கான இலச்சினையினை சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், லீலா பேலஸ் ஹோட்டலில் வெளியிடப்பட்டது.இந்நிகழ்வினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு திரை வாயிலாக நேரலையாக மாவட்ட ஆட்சித்தலைவர்  மொ.நா.பூங்கொடி, அவர்கள் தலைமையில் தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளர்         .பூ.சு,கமலக்கண்ணன் உட்பட அரசு அலுவலர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

 

Tags :

Share via

More stories