குடும்பத்துடன் தற்கொலை முயற்சி - முதியவர் உயிரிழப்பு

by Staff / 18-04-2024 12:05:39pm
குடும்பத்துடன் தற்கொலை முயற்சி - முதியவர் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மல்லித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(70). இவரது மனைவி வத்சலா(65). இவர்களுக்கு விமல்(45) என்ற மகன் உள்ளார். கடந்த 15ஆம் தேதி, வீட்டில் வறுமை காரணமாக, 3 பேரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று சந்திரசேகர் உயிரிழந்தார். வத்சலா விமல் ஆகியோர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via