தீயில் கருகிய பெண்

by Staff / 01-10-2023 03:50:08pm
தீயில் கருகிய பெண்

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா போத்தநதியைச் சேர்ந்தவர் பாண்டித்தாய் 65. இவர் குடியிருக்கும் வீட்டில் மின்சாரம் இல்லாததால் அவர் மண் எண்ணெய் விளக்கு வைத்து சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது விளக்கு தவறி கீழே விழுந்து தீ பிடித்ததில் பாண்டித்தாய் சேலையில் தீப்பிடித்து உடலில் தீக்காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சையில் இருந்து அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via