மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை
தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேன்பொத்தை பகுதியில் வசித்து வந்த வெள்ளத்தாய்(40) என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு அவரின் கணவரான முருகன் (54) என்பவர் கொலை செய்துள்ளார். இதுகுறித்து மேற்படி நபர் மீது அப்போதைய செங்கோட்டை காவல் ஆய்வாளர் பிரதாபன் (தற்போது நெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்ட கடலோர காவல்படை உதவி கண்காணிப்பாளர்) வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். இவ்வழக்கின் விசாரணையானது தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதி அனுராதா குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கும் செங்கோட்டை காவல்துறையினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Tags : Life sentence for husband who strangled his wife