ஜெயக்குமார் மரண வாக்குமூல கடிதங்கள்

by Staff / 09-05-2024 02:36:44pm
ஜெயக்குமார் மரண வாக்குமூல கடிதங்கள்

நெல்லை காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வழக்கில் மரண வாக்குமூலம் பாணியில் எழுதப்பட்ட 2 கடிதங்கள் சிக்கியது. ஏப்ரல் 30ஆம் தேதியிடப்பட்ட முதல் கடிதத்தில் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும், கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு உள்ளிட்ட 9 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. 2வது கடிதத்தில் தனது மருமகன் மற்றும் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதை அவரே எழுதினார அல்லது திசை திருப்பும் முயற்சியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via