.சந்திராயன் 3 வெற்றி கொண்ட்டாட்டத்தில் ஒபிஎஸ் அணியினர்
மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் ஓபிஎஸ் அணியினர் சார்பில் மேலூர் நகர் தலைவர் தங்கசாமி தலைமையில் சந்திராயன் 3, நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதை கொண்டாடும் விதமாக ஆலயத்தில் சிறப்பு தரிசனம் செய்து பின்பு 108 தேங்காய் உடைத்து வழிபட்டனர். மேலும் பொது மக்களுக்கு இந்தியாவின் பெருமையை விளக்கி இனிப்பு வழங்கி இன்று கொண்டாடினர்.
Tags :