வடமாநிலத் தொழிலாளிஅடித்துக் கொலை

by Staff / 17-01-2023 02:21:18pm
வடமாநிலத் தொழிலாளிஅடித்துக் கொலை

சேலத்தில் சாலையில் வழிவிடாத பிரச்னையில் ஏற்பட்ட மோதலில் பிகாா் மாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த குரு சரண் சகானி, அனில், ராகேஷ், அஜய் உள்ளிட்டோா் சேலம் தாதகாப்பட்டியைச் சோ்ந்த நெகிழி பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா்.இவா்கள் நான்கு பேரும் சமையலுக்குத் தேவையான காய்கறி பொருள்களை வாங்க ஞாயிற்றுக்கிழமை மாலை தாதகாப்பட்டி, அம்மாள் ஏரி சாலை பகுதியில் நடந்து சென்றபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் மூணங்கரடு பகுதியைச் சோ்ந்த சீனிவாசன், ராஜா ஆகியோா் வந்தனா்.

அவா்கள் இருவரும் சாலையில் நடந்துசென்ற 4 பேரை வழிவிடும்படி ஒலிப்பானை ஒலிக்கச் செய்தனா். அப்போது அவா்கள் நான்குபேரும் நகா்ந்து செல்லாமல் சென்ாகத் தெரிகிறது. சாலையில் வழிவிடாத பிரச்னை தொடா்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.அப்போது இரு தரப்பினரும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனா். இதில் குருசரண் அங்கிருந்த தொட்டியின் மீது விழுந்தாா். படுகாயமடைந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை சக நண்பா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதனிடையே தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி ராஜா, சீனிவாசன் ஆகியோரை கைது செய்தனா்.

 

Tags :

Share via