திமுகவினரால் தாக்கப்பட்ட வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி

by Staff / 18-04-2024 12:03:02pm
திமுகவினரால் தாக்கப்பட்ட வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி

பெரம்பலூரில் திமுக வேட்பாளர் அருண்நேருவிற்கு ஆதரவாக நேற்று அக்கட்சியினர் வாக்கு சேகரித்த போது சுயேச்சை வேட்பாளர் ரெங்கராஜ் அங்கு பரப்புரை செய்தார். திமுகவினர் பேரணியாக சென்றதால் சுயேச்சை வேட்பாளர் தரப்பில் வழிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு திமுகவினர் ரெங்கராஜை தாக்கினர். தொடர்ந்து அங்கிருந்த போலீஸார் பிரச்சனையை முடித்த வைத்தனர். காயமடைந்த வேட்பாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via