மக்களை திசை திருப்புகிறது திமுக - ஜெயக்குமார்

by Staff / 14-08-2023 02:47:00pm
மக்களை திசை திருப்புகிறது திமுக - ஜெயக்குமார்

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் மாணவன் ஜெகதீஸ்வரன் (19 வயது) நேற்று தற்கொலை செய்துகொண்ட நிலையில், இன்று மாணவனின் தந்தை செல்வசேகர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மக்களை திசை திருப்புவதற்காக திமுகவினர் நீட் தேர்வு விவகாரத்தை கையில் எடுக்கின்றனர். நீட் தேர்வு ரத்து தொடர்பாக திமுக எம்.பி.க்கள் ஏன் குடியரசுத் தலைவரை பார்க்கவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

Tags :

Share via