கஞ்சா விற்ற 3 பேர் கைது

by Staff / 15-08-2023 01:15:11pm
கஞ்சா விற்ற 3 பேர் கைது

அழகாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த செந்தில் மகன் அபினேஷ் (வயது 23), பெரியசாமி மகன் கண்ணன் (25), குணசேகரன் மகன் சிங்காரவேலன் என்பதும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via