அமைச்சரின் காலில் விழுந்தவர் பணியிட மாற்றம்

by Staff / 17-08-2023 12:06:19pm
அமைச்சரின் காலில் விழுந்தவர் பணியிட மாற்றம்

கோவையில் பணிபுரியும் அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணன் என்பவர் நேற்று திடீரென தனது 6 மாத குழந்தையுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் காலில் விழுந்து, தேனிக்கு பணியிட மாற்றம் வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மனைவி இறந்துவிட்ட நிலையில், தனது இரண்டு குழந்தைகளை பார்த்துக்கொள்ள வசதியாக அவர் தேனிக்கு பணிமாறுதல் கேட்டிருந்தார். இந்நிலையில், பணிமாறுதல் கோரி 6 மாத குழந்தையுடன் அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்த ஓட்டுநர் கண்ணனை, நிரந்தர ஒருவழி மாறுதல் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட், திண்டுக்கல் மண்டலத்திற்கு தமிழக அரசு மாற்றியுள்ளது

 

Tags :

Share via