உயிரிழந்தோர் எண்ணிக்கை 71-ஆக உயர்வு
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மண்டி மாவட்டத்தில் உள்ள பாகிபுல் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஃபகில், சம்மர் ஹில் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களில், 57 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாரிகள் தகவல் வெளியாகியுள்ளது. மற்றவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tags :