வெடித்துச் சிதறிய ஆம்புலன்ஸ்

by Staff / 19-08-2023 05:04:40pm
வெடித்துச் சிதறிய ஆம்புலன்ஸ்

காஞ்சிபுரம் அடுத்த பெரும்புள்ளிபாக்கம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது வெடித்து சிதறிய ஆம்புலன்ஸ் காவேரிப்பாக்கம் அடுத்துள்ள பெரும்புலி பாக்கம் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது இதில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற தனியார் ஆம்புலன்ஸில் நோயாளியை ஏற்றி சென்ற போது முன்னே சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர் இதை நிறுத்து மற்றொரு ஆம்புலன்ஸ் மூலமாக இவர்கள் பெங்களூர் அனுப்பப்பட்ட நிலையில் விபத்தான ஆம்புலன்ஸ் அப்புறம் படுத்தும் பணியில் ஈடுபட்ட போது திடீரென ஆம்புலன்ஸ் முன் பகுதி வெடித்து சிதறி ஆம்புலன்ஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதனை அடுத்து காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயை அனைத்து ஆம்புலன்சை சாலை ஓரம் அப்புறப்படுத்தினர் இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசில் ஏற்பட்டது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags :

Share via