சென்னையில் நாளை தொண்டர்களை சந்திக்கிறேன்-விஜயகாந்த்
தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கடந்த இரு நாட்களுக்கு முன்பு அளித்துள்ள பேட்டியில் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என கூறினார். விஜயபிரபாகரன் அளித்த இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஒருபொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது
விஜயகாந்த் இருப்பதாக தெரிவித்தார்.இந்தநிலையில் பலரும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளிவைக்கும் வண்ணம் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், நான் நலமுடன் உள்ளேன். சென்னையில் நாளை தொண்டர்களை சந்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Tags : நாளை தொண்டர்களை சந்திக்கிறேன்-விஜயகாந்த்