மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவனுக்கு ஆயுள் தண்டனை 

by Editor / 25-08-2023 08:41:02pm
மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவனுக்கு ஆயுள் தண்டனை 

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி காவல் நிலைய குற்ற எண் 106க்கு 2014 ல் பால மார்த்தாண்டபுரத்தை சேர்ந்த பொன்னுத்துரை  என்பவர் தனது மனைவி லலிதா என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு தீயிட்டு  கொளுத்தி விட்டதாக  அன்றைய காவல் ஆய்வாளர் ரகுராஜன் பொன்னுத்துரை மீது கொலை வழக்கு பதிவு செய்தார்.இந்த வழக்கு தென்காசி மாவட்ட  கூடுதல் அமர்வு  நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.இந்த நிலையில் இந்த வழக்கு இன்று  நீதிபதி  அனுராதா  முன்பு விசாரணைக்கு வந்தது.  வழக்கினை விசாரித்த நீதிபதி அனுராதா இன்று  இந்த வழக்கில் பொன்னுத்துரை குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு ஆயுள் தண்டனையும் 2ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.  மேற்படி வழக்கிற்காக சிறப்பாக வாதாடிய அரசு தரப்பு வக்கீல் வேலுச்சாமி மற்றும்  தலைமை காவலர் முருகேஸ்வரனையும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சாம்சன் மற்றும் ஆய்க்குடி காவல் ஆய்வாளர் வேல்கனி ஆகியோர் பாராட்டினர்.
 

 

Tags : மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவனுக்கு ஆயுள் தண்டனை 

Share via