மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை.
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பரமன்விளையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 49). இவர் கூலி வேலை செய்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவர் குடிப்பழக்கத்தால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று இவர் மதுவில் விஷத்தை கலந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்த அவரது உறவினர்கள் கண்ணனை மீட்டு தனியார் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு கண்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார். இவருக்கு கீதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இது குறித்து கண்ணனின் தம்பி வைகுண்டம் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :