ஆர்.கே. செல்வமணிக்கு கைது வாரண்ட்

by Staff / 29-08-2023 12:24:45pm
ஆர்.கே. செல்வமணிக்கு கைது வாரண்ட்

ஆந்திர அமைச்சர் ரோஜாவின் கணவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முகுல் சந்திர போத்ரா என்ற பைனான்சியரால் தான் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிட்டதாக ஒரு பேட்டியில் செல்வமணி குற்றம் சாட்டியிருந்தார். இதை எதிர்த்து முகுந்த் அவதூறு வழக்கு தொடர்ந்தார். முகுந்த் இறந்த பிறகும், அவரது மகன் ககன் போத்ரா இந்த வழக்கை நடத்தி வருகிறார். திங்கள்கிழமை, செல்வமணி வழக்கு விசாரணைக்கு வராததால் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது.

 

Tags :

Share via